Friday, January 16, 2015

தமிழக அரசு விருது...

திருவள்ளுவர், தந்தை பெரியார், காமராசர், அண்ணா உள்ளிட்ட தன்னலமற்ற தலைவர்கள், பேரறிஞர்களின் பெயரிலான விருதுகளை பெறுவோர் பெயர்ப் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


தமிழுக்கு தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது, தந்தைபெரியார் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான நபர்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.விருதுகள் பெறுவோர் பெயர் விவரம் வருமாறு:-

  1. திருவள்ளுவர் விருது - திருக்குறள் க.பாஸ்கரன்
  2. தந்தை பெரியார் விருது - தாவூஜீ குப்தா
  3. அண்ணல் அம்பேத்கர் விருது - ஆழி.கு.மகாலிங்கம்
  4. பேரறிஞர் அண்ணா விருது - கஸ்தூரி ராஜா
  5. பெருந்தலைவர் காமராசர் விருது - கருமுத்து தி.கண்ணன்
  6. மகாகவி பாரதியார் விருது - இளசை சுந்தரம்
  7. பாவேந்தர் பாரதிதாசன் விருது - கவிஞர் கண்மதியன்
  8. தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - கரு.நாகராசன்
  9. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - ஏ.எம்.ஜேம்ஸ்.



இந்த விருதுகளை 16.1.15 அன்று பிற்பகல் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கிட முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.விருது பெறுவோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரை ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். மேலும், வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு நிதியுதவி அரசாணைகள் இவ்விழாவில் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

Popular Posts