Monday, August 21, 2017

GK IN TAMIL | வினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.


மருத்துவ பட்டங்கள்

ஆண்களைப் பற்றிய மருத்துவ படிப்பு - ஆன்ட்ராலஜி

பெண்களைப் பற்றிய படிப்பு - கைனகாலஜி

குழந்தை மருத்துவம் - பீடியாட்ரிக்ஸ்

முதியோர் நலன் - ஜிரியாடிரிக்ஸ்

மகப்பேறு - ஆப்ஸ்டெட்ரிக்ஸ்

தோல் பற்றியது - டெர்மடாலஜி

காது, மூக்கு, தொண்டை பற்றியது - ஒட்டோரைனோல ரிஞ்சியாலஜி

புற்றுநோய் பற்றியது - ஆன்காலஜி

உடல்செயல்பாடுகள் - பிஸியாலஜி

மூளை, மண்டையோடு - பிரினாலஜி

பற்கள் - ஒடன்டாலஜி


சமாதிகளின் பெயர்கள்

சாந்திவனம் - நேரு

சக்திஸ்தல் - இந்திராகாந்தி

வீர்பூமி - ராஜீவ்காந்தி

விஜய்காட் - லால்பகதூர் சாஸ்திரி

கிஸான்காட் - சரண்சிங்

நாராயண்காட் - குல்சாரிலால் நந்தா

அபாய்காட் - மொரார்ஜி தேசாய்


5 வகை உயிர்கள்

* மனிதர்களும், விலங்குகளும் மட்டும் உயிரினங்கள் என்று எண்ணிவிடாதீர்கள். 5 வகையான உயிரினங்கள் பூமியில் உள்ளன. அவை தாவரம், விலங்கு மற்றும் மொனிரா, புரோடிஸ்டா, பூஞ்சை என வகைப்படுத்தப்படுகிறது.

* மொனிரா தொகுதி ஒரு செல் புரோகேரியாட்டுகள் எனப்படுகின்றன. பாக்டீரியா, நீலப்பசும்பாசி போன்றவை இந்த தொகுதியைச் சேர்ந்தவை.

* புரோடிஸ்டா தொகுதி ஒரு செல் யூகேரியாட்டுகள் எனப்படுகின்றன. அமீபா, யூக்ளினா, பாராமீசியம் போன்றவை இந்த தொகுதி உயிரினங்களாகும்.

* பூஞ்சைகள் செல் சுவருள்ள பச்சையமற்ற யூகேரியாட்டுகள் ஆகும்.

* தாவரங்கள் செல் சுவரும், பச்சையமும் உள்ள யூகேரியாட்டுகள் ஆகும்.

* விலங்குகள் செல்சுவரற்ற, பச்சையமற்ற யூகேரியாட்டுகள் ஆகும். மனிதன் விலங்கு தொகுதியைச் சேர்ந்தவன்.

* இந்த ஐந்து வகை உயிரின தொகுதியிலும் சேராதது வைரஸ்கள்.

* உயிரினங்களை ஐந்து தொகுதிகளாக வகைப்படுத்தியவர் ராபர்ட் விடேகர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

வினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.


1. தமிழகத்தின் முதல் கற்கோவில் என்ற சிறப்பை பெறும் ஆலயம் எது?

2. விமானங்கள் பறக்கும் வளிமண்டல அடுக்கு எது?

3. சந்திரயானில் இருந்த எந்தக் கருவி நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை கண்டுபிடித்தது?

4. பட்டா முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

5. 23½ டிகிரி தென் அட்சக்கோடு எப்படி அழைக்கப் படுகிறது?

6. டெர்பி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர் புடையது?

7. இந்தியாவில் யுரேனியம் தாது கிடைக்கும் ஒரே சுரங்கம் எது?

8. நந்திக் கலம்பகம் நூல் யாரைப் பற்றி பாடப்பட்டுள்ளது?

9. ஈராக் நாட்டின் பழைய பெயர் என்ன?

10. நிலவைப் பற்றிய படிப்பின் பெயர் என்ன?

11. 'தி அனிமல்' என்று அழைக்கப்பட்ட விளையாட்டு வீரர் யார்?

12. வங்காள பிரிவினைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் யார்?

13. தமிழகத்தில் சட்டமேலவை எப்போது கலைக்கப்பட்டது?

14. ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்திய பெண்மணி யார்?

15. பிரம்மஞான சபையை தொடங்கியவர்கள் யார்?

விடைகள் : 

1. கூரம் சிவன் கோவில், 2. ஸ்டிரடோஸ்பியர், 3. எம்-3, 4. ஷெர்ஷா, 5. மகர ரேகை, 6. குதிரைப் பந்தயம், 7. ஜடுகுடா (ஜார்க்கண்ட்), 8. மூன்றாம் நந்தி வர்மன், 9. மெசபடோமியா, 10. செலினாலஜி, 11. எட்மண்டோ, (பிரேசில் கால்பந்து வீரர்), 12. கர்ஸன், 13. 1986, 14. மேரி லீலா ராவ், 15. ஜெனரல் ஆல்காட் மற்றும் மேடம் பிளாவட்ஸ்கி.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Popular Posts