Sunday, March 30, 2014

TAMIL G.K 1061-1080 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

TAMIL G.K 1061-1080 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

1061. இந்திய வரலாறு | 1857-ம் ஆண்டு கலகத்திற்கு உடனடிக்காரணம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (கொழுப்பு தடவிபட்ட துப்பாக்கி தோட்டாக்கள்)        


1062. இந்திய வரலாறு | பாரக் பூரில் கொழுப்புத் தடவிய துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த சிப்பாய்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (மங்கள் பாண்டே)        


1063. இந்திய வரலாறு | பேரரசியின் அறிக்கையை கானிங் பிரபு வாசித்த தர்பார்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (அலகாபாத்)        


1064. இந்திய வரலாறு | இராணுவத்தை சீரமைப்பதற்கு கர்சன் பிரபுவினால் நியமிக்கப்பட்ட படைத்தளபதி-

       Answer | Move the mouse over answer | Hover over me         (கிச்சனர் பிரபு)        


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Saturday, March 29, 2014

TAMIL G.K 1041-1060 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

TAMIL G.K 1041-1060 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு

1041. இந்திய வரலாறு | சதி வழக்கம் இவரது காலத்தில் ஒழிக்கப்பட்டது-

       Answer | Move the mouse over answer | Hover over me         (வில்லியம் பெண்டிங்)        


1042. இந்திய வரலாறு | ராணுவத்துறையில் வில்லியம் பெண்டிங் பிரபுவினால் ரத்து செய்யப்பட்ட முறை-

       Answer | Move the mouse over answer | Hover over me         (இரட்டைபடி)        


1043. இந்திய வரலாறு | எந்த மாகாண ஆட்சிக்கு லாரன்ஸ் சகோதரர்கள் பணியாற்றினார்கள்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (பஞ்சாப்)        


1044. இந்திய வரலாறு | தந்தித்துறையின் முதல் கண்காணிப்பாளர்-

       Answer | Move the mouse over answer | Hover over me         (ஓஷாகன்னசே)        


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Friday, March 28, 2014

ஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)

ஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896) தொழில் முன்னோடிகள் | என்னிடம் இருக்கும் ஆயிரம் ஐடியாக்களில் ஒன்றே ஒன்று மட்டுமே சரியானதாக இருந்தால்கூட, நான் திருப்திப்படுவேன். - ஆல்ஃபிரெட் நோபல் ஆகஸ்ட் 6, 1945. ஜப்பானின் ஹிரோஷிமா நகரம். உலகின் முதல் அணுகுண்டை வீசுகிறது அமெரிக்கா. நாசம், நம்பவே முடியாத நாசம். 90,000 கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாகச் சாய்ந்தன. 70,000 பேர் உடனே இறந்து போனார்கள். 70,000 பேர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல கதிர்வீச்சு நோய்களுக்கு ஆளாகி மரணமடைந்தார்கள். ஆகஸ்ட் 9, 1945. நாகசாகி நகரம். அமெரிக்கா இரண்டாவது அணுகுண்டை வீசுகிறது. 40,000 பேர் உடனே மரணம். 30,000 பேர் கதிர்வீச்சு நோய்கள் வந்து உயிர் இழந்தார்கள். 75,000 பேர் காயமடைந்தார்கள். அணுகுண்டின் மூலாதாரம் டைனமைட் என்னும் ரசாயன வெடி மருந்து. இதைக் கண்டுபிடித்து இத்தனை உயிர்க்கொலைக்கும் காரணமாக இருந்த அந்த ரத்தக் காட்டேரி யார்? இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மனிதகுல முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் மாமேதைகளுக்கு உலகம் தரும் மாபெரும் கவுரவம் நோபல் பரிசு. அறிவுக்குக் கிரீடம் சூட்டும், உலகின் மாபெரும் அங்கீகாரமான இந்தப் பரிசை ஏற்படுத்தியவர் அன்பே வடிவமானவராக இருக்கவேண்டும். யார் அந்த மனித தெய்வம்? அதிர்ச்சி அடையாதீர்கள். அந்தக் கடவுளும் காட்டேரியும் ஒருவரேதான். அவர்தான் ஆல்ஃபிரெட் நோபல். ஆல்ஃபிரெட் நோபல் 1833 - ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் பிறந்தார். அவர் அப்பா இமானுவேல் பழைய கட்டிடங்களை இடிக்கும் கான்ட்ராக்டர். இதற்கான வெடிமருந்துகள் தயாரித்தார். பிசினஸில் பெருநஷ்டம் வந்தது. திவால் நோட்டீஸ் கொடுத்தார். அவருக்கு நான்கு குழந்தைகள். ஆல்ஃபிரெட் மூன்றாமவர். ஒவ்வொரு நாளும் அரை வயிற்றுச் சாப்பாடு. ராத்திரி சீக்கிரமே அம்மா வீட்டு விளக்குகளை அணைத்துவிடுவார். எண்ணெய் வாங்கும் பணத்தை மிச்சப்படுத்துவதற்குத்தான். ஆல்ஃபிரெட் சிறுவயதிலேயே சீக்காளி. பாதிநாள் பள்ளிக்கூடம் போகமாட்டான். அம்மாதான் பாடம் சொல்லிக் கொடுப்பார். உடல்நலக் குறைவால், பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் தங்கள் விளையாட்டுக்களில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். தனிமை, சோகம், இவைதாம் அவன் வாழ்க்கை. ஆல்ஃபிரெடின் நான்காம் வயதில் அவன் அப்பாவுக்கு ரஷ்யாவில் வேலை கிடைத்தது. மனைவியையும், குழந்தைகளையும் ஸ்வீடனில் விட்டுவிட்டுப் போனார். ஊர்ப் பெண்களுக்கு ஆடைகள் தைத்துக்கொடுத்து அவன் அம்மா குடும்பத்தை ஓட்டினார். ஆல்ஃபிரெட் பள்ளிக்கூடம் போனான். அந்தச் சிறுவயதிலேயே அபாரப் பொறுப்பு. எப்போதும் படித்துக்கொண்டேயிருப்பான். ஆல்ஃபிரெடின் ஒன்பதாம் வயதில் அப்பா வின் சம்பளம் ஓரளவு உயர்ந்தது. எல்லோரை யும் ரஷ்யாவுக்குக் கூட்டிக்கொண்டு போனார். வாழ்க்கையில் அடிபட்ட அவர் ஒரு பாடம் கற்றுக்கொண்டிருந்தார் - பணம் வரும், போகும். ஆனால், யாராலுமே நம்மிடமிருந்து பறிக்க முடியாத நிரந்தரச் செல்வம் அறிவு. அறிவும், திறமையும் இருந்தால், எந்தப் பாதாளப் படுகுழியிலிருந்தும் மீண்டு வரமுடியும். தன் நம்பிக்கையை மகன்கள் மனதில் ஆழமாகப் பதியவைத்தார். செலவு அதிகமாக இருந்தபோதிலும், தனிப்பட்ட ட்யூஷன் மாஸ்டர்கள் வைத்தார். மூன்று மகன்களும் நன்றாகப் படித்தார்கள். அவர்களில், ஆல்ஃபிரட் ஒருபடி மேல். தாழ்வு மனப்பான்மையால், பிறருடன் பழகாத அவன் எப்போதும் புத்தகமும் கையுமாகத் திரிவான், நள்ளிரவில் தூக்கம் கண்களைத் தழுவும் வரை படிப்பான். அதிலும், வேதியியல் படிப்பது அவனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அப்பா கையில் கொஞ்சம் பணம் வந்துவிட்டால், பிசினஸ் தொடங்க மனம் துறுதுறுக்கும். இயந்திரங்கள், வெடிமருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கினார். ஆல்ஃபிரட் உட்பட எல்லா மகன்களும் அப்பாவுக்குத் தோள் தந்தார்கள். அதிர்ஷ்டக் காற்றும் வீசியது. மகன்கள் தன் பிசினஸை தொடர்ந்து நடத்தி இன்னும் உயரங்களுக்குக் கொண்டுபோகவேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். தொழில் பயிற்சிக்காக, ஆல்ஃபிரெட்டை பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அனுப்பினார். முதலில் பாரிஸ். நைட்ரோகிளிசரின் என்னும் ரசாயனம் தீவிர சக்தியோடு வெடிக்கும் தன்மை கொண்டது, ஆனால், எப்போது, எப்படி வெடிக்கும் என்று தெரியாது. ஸோப்ரெட்டோ என்னும் விஞ்ஞானி நைட்ரோகிளிசரின் பற்றி ஆராய்ச்சிகள் செய்துவந்தார். ஆல்ஃபிரெட் அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். வயது 17. மனதில் காதல் உணர்ச்சிகள் அரும்பத் தொடங்கின. அலுவலகத்தில் ஒரு அழகிய இளம்பெண்ணச் சந்தித்தார். ரத்தத்தில் ஊறிய தயக்கமும், தாழ்வு மனப்பான்மையும் தடுத்தன. ஆனால், தன்னிடம் ஒரு ஜீவனாவது அன்பு காட்டாதா என்னும் பல வருட ஏக்கம் தாழ்மை உணர்வுகளை வென்றது. அவளிடம் பழகத் தொடங்கினார். நட்பு இறுகியது. அவர் காதல் என்று நினைத்தார். அவளுக்கோ இது நட்புதான். இன்னொருவரைத் திருமணம் செய்துகொண்டாள். இதைவிடச் சோகம், சில மாதங்களில் நோய் வந்து மரணமடைந்தாள். ஆல்ஃபிரெட் நெஞ்சம் சுக்கு நூறானது. இனிமேல் தன் வாழ்க்கையில் காதலுக்கும், கல்யாணத் துக்கும் இடமில்லை, தான் தனிமரம்தான் என்று முடிவெடுத்தார். ரஷ்யா திரும்பினார். ஒரே குறிக்கோள், நைட்ரோகிளிசரின் பயன்படுத்தி வெடிமருந்துகள் தயாரிக்கவேண்டும், பணம் குவிக்கவேண்டும். நைட்ரோகிளிசரின் ஆராய்ச்சியில் தீவிர மாக இறங்கினார். அப்போது வந்தது ஒரு மரண அடி. 1853 - 56 காலகட்டத்தில் கிரிமியப் போர் நடந்தது. ரஷ்யா ஒரு பக்கம், இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஒட்டாமான் பேரரசு மறுபக்கம். நோபல் குடும்பத்தின் தொழிற்சாலைகள் ரஷ்யாவுக்கு ராணுவத் தளவாடங்கள் சப்ளை செய்தார்கள். போர் முடிந்தது. ரஷ்யா தோல்வி கண்டது. சப்ளைக் கான பணம் நோபல் குடும்பத்துக்கு வரவில்லை. அப்பா இமானுவேல் மறுபடியும் திவால் ஆனார். சொந்த ஊரான ஸ்வீடன் திரும்பினார். ஆல்ஃபிரெடும் அப்பாவோடு வந்தார். வசதி இல்லை என்பதற்காகக் கனவுகளை மறக்க அவர் தயாராக இல்லை. வீட்டு அடுக்களையில் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். வங்கியில் கடன் வாங்கினார், சோதனைக் கூடம் தொடங்கினார். 1864. வயது 31. சோதனைக் கூடத்தில் மருந்துக் கலவை வெடித்தது. ஒட்டுமொத்தக் கூடமும் பற்றி எரிந்தது. ஆல்ஃபிரெடின் தம்பி உட்பட ஆறு பேரின் கருகிய உடல்கள் மட்டுமே மிஞ்சின. அப்பா இமானுவேலுக்கு உடல் வலது பாகம் பாதிக்க ப்பட்டது. ஆல்ஃபிரெட் சிறு காயங்களோடு தப்பினார். ஆனால், ஊரே அவரைச் சைத்தானின் பிரதிநிதியாகப் பார்த்தது. ஆபத்தான பொருட்கள் தயாரிக்கும் அவருடைய பரிசோதனைச்சாலை ஊரில் இருக்கக்கூடாது என்று நகரசபை தடை விதித்தது. ஆல்ஃபிரெட் ஒரு வழி கண்டுபிடித்தார். சிறிய கப்பலை விலைக்கு வாங்கினார். நகரின் வெளியே ஒரு ஏரியில் நிறுத்தினார். அங்கே ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். மூன்றே வருடங்கள். 1867 - இல் நைட்ரோகிளிசரின், ஒருவிதக் களிமண், இன்னும் சில மூலப்பொருட் கள் கலந்தார். டைனமைட் என்னும் வெடிமருந்து உருவானது. அன்றைய எல்லாத் தகர்ப்பு சாதனங்களைவிட மிக அதிக சக்தி கொண்டதாக இருந்தது. சுரங்கங்கள், கட்டட இடிப்புகள் ஆகிய துறைகளிலிருந்து ஆர்டர்கள் குவிந்தன. ஆனால், இவை அனைத்தையும் தாண்டி, போர்க்களங்களில் நாச வேலை களுக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஒரு காலகட்டத்தில் ஆல்ஃபிரெட் 90 - க்கும் அதிகமான ஆயுதத் தொழிற்சாலைகளின் அதிபராக, ஐரோப்பாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்தார். 1888-ல் ஆல்ஃபிரெடின் தம்பி மரணமடைந் தார். பிரெஞ்சு நாளிதழ்கள் ஆல்ஃபிரெட் மறைந்துவிட்டதாகத் தவறாகப் புரிந்துகொண் டார்கள். அஞ்சலி எழுதினார்கள் - ``அப்பாவி மக்களை அதிசீக்கிரமாகக் கொன்று குவிக்கும் வழிகளைக் கண்டுபிடித்துச் செல்வம் குவித்த மரண வியாபாரி டாக்டர் ஆல்ஃபிரெட் நோபல் மரணமடைந்தார்.” வரலாற்றில் தன் பெயரை மரண வியாபாரியாகப் பதிக்க அவர் விரும்ப வில்லை. தொடங்கியது பிராயச்சித்தம். நோபல் அறக்கட்டளை தொடங்கினார். தன் சொத்தின் 94 சதவீதத்தை எழுதிவைத்தார். பிறந்தன நோபல் பரிசுகள். slvmoorthy@gmail.com


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Wednesday, March 26, 2014

கிரிகோர் மெண்டல் | ஆஸ்திரிய ஆராய்ச்சியாளர்

கிரிகோர் மெண்டல் | ஆஸ்திரிய ஆராய்ச்சியாளர் 

>> மரபியலின் தந்தை என்று போற்றப்படும் ஆஸ்திரிய ஆராய்ச்சியாளரும், தாவரவியலாளருமான கிரிகோர் யோஹன் மெண்டல் (Gregor Johann Mendel) பிறந்த தினம் இன்று (ஜூலை 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: 

>> ஆஸ்திரியப் பேரரசின் ஹெய்ன்சன் டார்ஃப் நகரில் (இன்றைய செக் குடியரசு) ஏழை விவசாயக் குடும்பத்தில் (1822) பிறந்தார். பெற்றோரும் சகோதரியும் இவரது படிப்புச் செலவுக்காகக் கடுமையாக உழைத்தனர். 

>> இவரும் தோட்ட வேலை உள்ளிட்ட வேலைகள் மூலம் வருமானம் ஈட்டினார். படிப்பிலும் சிறந்து விளங்கினார். 1843-ல் ஒரு மடாலயத்தில் மதக்கல்வி பயின்று பாதிரியார் ஆனார். மடாலய அதிகாரி உதவியுடன், வியன்னா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணிதம், அறிவியல் பயின்றார். 

>> ஒரு பள்ளியில் இயற்கை அறிவியல் கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். இயற்கையை, தாவரங்களை மிகவும் நேசித்தார். ‘ஒரே குடும்பத்தில் பிறக்கும் பிள்ளைகள் ஏன் ஒரே சாயலாக உள்ளன? ஒரே இனத்தைச் சேர்ந்த செடிகள் ஏன் ஒரே மாதிரி உள்ளன?’ என்பது போன்ற கேள்விகள் சிறுவயதிலேயே இவருக்குள் எழுந்தன. 

>> இவை குறித்து ஆராய முடிவெடுத்தார். மடத்தின் தோட்டத்தில் பட்டாணிச் செடிகளை வளர்த்து, அவற்றின் மரபுப் பண்புகளை ஆராய்ந்தார். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மடத்தின் ஊழியர்கள் இவரது ஆராய்ச்சிகளுக்கு உறுதுணையாக இருந்தனர். 

>> குட்டையான - உயரமான செடிகளை இனக்கலப்பு செய்து வளர்த் தார். தன் ஆராய்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் கவனமாகப் பதிவு செய்தார். புதிய செடிகளின் உயரம், இலைகளின் தோற்றம், பூக்களின் நிறம், விதைகளின் வீரியம், செடிகளின் ஆரோக்கியம் ஆகிவற்றை கூர்ந்து கவனித்து புள்ளி விவரங்களை சேகரித்தார். இதற்காக 8 ஆண்டுகள் பாடுபட்டு, 28,000 செடிகளை வளர்த்தார். 

>> செடிகளின் நிறம், தோற்றம், உயரம் ஆகிய குணாம்சங்களில், மரபியல் கூறுகள் என்ற அடிப்படை அலகுகள் இருப்பதை அறிந்தார். மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படுவதைக் கண்டறிந்தார். 

>> இவற்றை விளக்க 2 விதிகளை உருவாக்கினார். இவை ‘மெண்டலின் விதிகள்’ எனப்படுகின்றன. பொஹீமியாவில் உள்ள ப்ரன் இயற்கை வரலாற்று சங்கத்தில் 1865-ல் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். 3 ஆண்டுகள் கழித்து மற்றொரு ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். 

>> உயிரினங்கள் அனைத்திலும் மரபுத் தொடர்ச்சி உள்ளது. அதற்கு மரபணுக்கள்தான் காரணம். வீரியம் அதிகம் உள்ள மரபுக் கூறின் பண்பு அடுத்த தலைமுறைக்குச் செல்கிறது என்பதை இக்கட்டுரைகளில் விளக்கியிருந்தார். ஆனாலும், இவரது ஆராய்ச்சி களின் முக்கியத்துவம் அவ்வளவாக யாருக்கும் தெரியவில்லை. 

>> பாதிரியாராக இருந்துகொண்டே பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார். 1868-ல் மடாலயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனாலும், ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். தேனீக்களில் கலப்பினத்தை உருவாக்கினார். வானியல், பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். 

>> உயிர் அறிவியலின் அடிப்படையைக் கண்டறிந்தவர், மரபியலின் தந்தை என்று போற்றப்படும் கிரிகோர் யோஹன் மெண்டல் 62-வது வயதில் (1884) மறைந்தார். இவர் மறைந்து வெகுகாலத்துக்குப் பிறகே இவரது ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் பெற்றன. 
- ராஜலட்சுமி சிவலிங்கம் 


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Popular Posts